Monday, May 24, 2010

தமிழ் இனத்தை அழித்து விட்டு தமிழ் மாநாடு நடத்தி என்ன பயன் ?

தமிழ் இனத்தை அழித்து விட்டு தமிழ் மாநாடு நடத்தி என்ன பயன் ?

கத்தி வைத்து  சதையை கிழிக்கும்காட்சி, கோரக் கொலைக் காட்சி
பார்த்தபின்னும் உலக சமுதாயம் இன்னும் அமைதியாக இருப்பது
வெட்கக்கேடு.இட்லர் கொடியவன் படித்து இருக்கிறோம்.
இன்று இட்லரை மிஞ்சும் கொடியவன் ராஜபட்சே பார்க்கிறோம் .
தட்டிக் கேட்க வேண்டிய ஐநா மன்றம் அமைதியாக உள்ளது .
ராஜீவ் காந்தி ஒரு உயிருக்காக இன்னும் எத்தனை லட்சம் தமிழர்கள்
உயிர் போக வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கின்றது.
கொலை செய்தவர்களைவிட கொலை செய்ய தூண்டி யவர்களுக்கு
தண்டனை அதிகம் சட்டம் சொல்கிறது .ராஜீவ் காந்தியை கொலை செய்ய
தூண்டி ய காங்கிரஸ் காரர்களுக்கு என்ன தண்டனை தந்தார்கள் .
இலங்கை சென்ற இந்திய அமைதிப் படை என்ன செய்தது ?
இரண்டு பேர் சண்டை இடுவதை தடுக்கச்  சென்றது .
சிங்களனோடு சேர்ந்து தமிழரைக் கொன்றது .
தமிழ் பெண்களை கற்பழித்தது.இந்திய அமைதிப் படையை
வரவேற்க மாட்டேன் என்றார் முதல்வர் .
மனிதாபிமானம் செத்து விட்டதா?
இலங்கையில் தமிழரைக் கொல்ல இந்திய ஆயுதங்கள் .
இட்லரை மிஞ்சும் கொடியவன் ராஜபட்சே
யோக்கியன் போல உலக வலம் வருகிறான் .
இந்தியாவும் அவனுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு தருகின்றது .
வயதான தமிழ்த் தாயை திருப்பு அனுப்புகின்றனர்.
மன சாட்சி உள்ள உலகத் தமிழன் ஒருவரும்
இதை ஏற்க மாட்டார்கள் .ரோம் நகர் தீ பிடித்து எரியும் போது
நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வு நினைவுக்கு வருகின்றது .
  
செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக
தமிழர்களை கொன்று குவித்த இட்லரை மிஞ்சும் கொடியவன் ராஜபட்சே
சிறைப்பிடிக்கப் பட்டு தண்டனை வழங்கப் பட வேண்டும் .
முள்வேலியில் மிஞ்சி இருக்கும் உயிர்களாவது சுதந்திரமாக
வாழ வழி செய்ய வண்டும் .இதை செய்யா விடில் தமிழன் என்றோ
 மனிதன் என்றோ சொல்லிக் கொள்ள யாருக்கும் அருகதை இல்லை .
நெஞ்சு பொறுக்க வில்லை .கண் முன் நடக்கும் அநீதியை
தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை .
கனணியுகமா?காட்டுமிராண்டி  யுகமா?
இரா .இரவி www.kavimalar.com



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment