Sunday, June 20, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தழிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் – தழிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

LTTE

செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம் என்றும் இம்மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் »

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு மிரட்டல்

kolathur mani

பெரியார் திராவிடர் கழகம் 'குடிஅரசு' தொகுப்பை வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திராவிடர் கழகத்தில் உள்ள சிலரை மிகவும் ஆத்திரப்படுத்தியிருக்கிறது. மேலும் »

குருணாகலில் கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் இருவர் கைது

arrest  008

குருணாகல் பிரதேசத்தில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

காரைநகர் கடற்படை தளத்தில் குண்டுச்சத்தங்கள்: யாழ் மக்கள் அச்சத்தில்

ltteboats

நேற்று மாலை காரைநகர் கடற்படைத்தளத்தில் தொடர் குண்டுவெடிப்புக்கள் கேட்டதனால் யாழ் மக்கள் மிகுந்த அச்சமடைந்ததாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: மேலும் »

மதுரையில் வழக்கறிஞர்களின் உடல்நிலை கவலைக்கிடம்

Bagath Singh,  before he was arrested

தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி மதுரையில் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிகள் பகத்சிங் மற்றும் நடராசன் ஆகியோரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாது- யசூஷி அகாஷி

20080114142857mahindarajapakseyashishiaka

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட மாட்டாது என ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார்.கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் »

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அமெரிக்காவை சென்றடைந்தார்

J.S. Tissainayagam

சிறீலங்கா அரசினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பன்னாட்டு ஊடக அழுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அமெரிக்காவை சென்றடைந்துள்ளதாக, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு (CPJ – Committee to Protect Journalist) தெரிவித்துள்ளது. மேலும் »

இன்று உலக அகதிகள் தினம்

sri-lanka-civilians-tamil-refugees-kadirgamh-chettikulam

இன்று உலக அகதிகள் தினமாகும்.உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்துள்ள 40 கோடி மக்களுக்கான அங்கீகாரத்தின் பொருட்டு இவ்வாண்டுக்கான தொனிப்பொருளாக 'வீடு'அடையாளம் காணப்பட்டுள்ளது இவர்களில் சுமார் 10 கோடிப்பேர்   அகதிகளாகக்காணப்படுகின்றனர். மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் – ஜேர்மனி

vote_eelam

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி 3)  20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும். மேலும் »

எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்….

Bagath Singh,  before he was arrested

மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது. மேலும் »

பார்வதி அம்மாளை இந்தியா கொண்டுசெல்ல திருமாவளவன் தொடர்புகொள்ளவில்லை- சிவாஜிலிங்கம்

tna.sivajilingam.002

தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இந்தியா கொண்டு செல்வதற்காக தொல்.திருமாவளவன் தன்னுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் . மேலும் »

செம்மொழி யார் மொழியப்பா?

Semmoly

செம்மொழி மாநாடாம்.. தமிழ் திருநாட்டில்?
அம்மொழி எம்மொழியைச் சார்ந்ததாம்..?
செந்தமிழ் மாநாடென்றறிவிக்கவில்லையே -அப்போ? மேலும் »

சீனத்து சிறைக்கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி.. இனியும் இலங்கையிலே தழைக்குமா தமிழ் இனமென்னும் பயிர்.. – டி.ராஜேந்தர்

TR

பழி வாங்கும் படலம் என்ற பெயரில் இலங்கையில் தமிழர்களைச் செய்து விட்டார்கள் காலி.. இதிலே சீனத்து சிறைக்கைதிகளுக்கும் கொடுத்து விட்டார்கள் மேய்வதற்கு வேலி.. இனியும் இலங்கையிலே தழைக்குமா தமிழ் இனமென்னும் பயிர்.. என்று டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் »

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டத்தால் தமிழ் அரியணையில் அமரும்-சீமான்

seemaan_speech

அறிவார்ந்த எமது வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கிப் போராடி கைதாகி உள்ளனர்.அவர்கள் போராட்டம் இன்றில்லாவிட்டாலும் நாளை வெற்றிபெறும்,அன்னைத்தமிழ் நீதிமன்றத்தில் அரியணையில் அமரும் என்று நாம் தமிழர் இயக்க சீமான் தெரிவித்துள்ளார். மேலும் »

மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் ராவணன் படம் போட்டதால் சிறீலங்காப்படையினரால் தீக்கிரை

6

மட்டக்களப்பு, கல்லடியில் ராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கு ஆதரவான இராணுவத்தரப்பே இச்செயலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

தாய்த்தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கான பட்டினிப் போராட்டம். டென்மார்க் தமிழர் பேரவையின் பெருமையும் வேதனையும்.!!

dtf

தாய்த் தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிட உரிமைகோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்டவாளர்களை பாராட்டுவதில் டென்மார்க் தமிழர் பேரவையினர் பெருமைகொள்வதுடன் வேதனையும் அடைகின்றோம். மேலும் »

பட்டினிப்போர் நடத்திய வழக்குரைஞர்கள் தமிழக காவல்துறையால் கைது

fasting_advocates

தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி பட்டினிப்போரில் ஈடுபட்ட மதுரை மற்றும் சென்னை சட்டவியலாளர்கள் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் சிங்கள மாணவரிடையே மோதல்

eastern_university

கிழக்குப் பல்கலைக்கழகத்திலே தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடிபோதையில் இருந்த சிங்கள மாணவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இந்த மோதல் ஆரம்பமானதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்: 35க்கு மேற்பட்ட நிலையங்களில் வாக்களிப்பு

THESIYA-NCCT_1

யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 35க்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் »

மட்டக்களப்பிலுள்ள திரையரங்கத்திற்கு தீ வைப்பு

fire

மட்டக்களப்பு நகரிலுள்ள சினிமாத் திரையரங்கமொன்றிற்கு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment